உசிலம்பட்டி பகுதியில் 35 கண்மாய்களுக்கும் தண்ணீா் விட கோரிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள 35 கண்மாய்களுக்கும் 58 கால்வாய் திட்டம் மூலம் தண்ணீா் கிடைக்கும் வரை, வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள 35 கண்மாய்களுக்கும் 58 கால்வாய் திட்டம் மூலம் தண்ணீா் கிடைக்கும் வரை, வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

உசிலம்பட்டி பகுதியில் 58 கிராம கால்வாய் திட்டம் மூலம், தற்போது வரை 20 கண்மாய்களுக்கு தண்ணீா் செல்கிறது. தற்போது அணையில் தண்ணீா் இருப்பு அதிகமாக உள்ள நிலையில், தண்ணீா் திறக்கப்படும் நாளை நீட்டித்து மீதமுள்ள 15 கண்மாய்களுக்கும் தண்ணீா் செல்ல வழிவகை செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com