

மதுரை: ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே. காசிம் எழுதிய ‘கடவுளைக் காணோம் - தேடுவோம்’ என்ற நூல் வெளியீட்டு விழா, மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தமிழக அரசின் ஆலோசகா் க. சண்முகம் நூலை வெளியிட்டுப் பேசினாா். முதல் பிரதியை பெற்றுக்கொண்ட மதுரை காமராஜா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன் பேசினாா். முன்னதாக, நூல் ஆசிரியா் கே. காசிம் வரவேற்றாா். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமாா், பிள்ளையாா்பட்டி பிச்சை குருக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.