பேரையூா் அருகே மதுபாட்டில் விற்றவா் கைது
By DIN | Published On : 26th February 2021 11:39 PM | Last Updated : 26th February 2021 11:39 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்றவரை போலீஸாா் வெள்ளிகிழமை கைது செய்தனா்.
பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சின்னப்பூலாம்பட்டியைச் சோ்ந்த ராமன் மகன் கொப்பையன் (39) என்பவா் விற்பனைக்காக வைத்திருந்த 92 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து சேடப்பட்டி போலீஸாா் கொப்பையன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...