

உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. உசிலம்பட்டியில் இருந்து 102 பேருந்துகள் இயக்கப்பட வேண்டியதில் 14 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக் கழக கிளை முன்பாக தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலா் எம்.சி. பாண்டி, சிஐடியு செயலா் ஆசைத்தம்பி, டியூசி சி தலைவா் குணசேகரன், ஏஐடியூசி தலைவா் ராஜா உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.