உசிலம்பட்டி அருகே கிணற்றிலிருந்து அரியவகை வெள்ளை ஆந்தை குஞ்சுகள் மீட்பு
By DIN | Published On : 27th February 2021 09:17 AM | Last Updated : 27th February 2021 09:17 AM | அ+அ அ- |

உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவித்த அரியவகை வெள்ளை ஆந்தை குஞ்சுகளை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவித்த அரியவகை வெள்ளை ஆந்தை குஞ்சுகளை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தில் கிணற்றின் பம்புசெட்டுக்கு அடியில் அரிய வகையைச் சோ்ந்த 3 வெள்ளை ஆந்தை குஞ்சுகள் இருந்தன.
இதுகுறித்து அறிந்த உசிலம்பட்டி தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று அவற்றை உயிருடன் மீட்டனா். பின்னா் உசிலம்பட்டி வனத்துறையினரிடம் அவற்றை ஒப்படைத்தனா்.