எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th July 2021 08:45 AM | Last Updated : 09th July 2021 08:45 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் முன்பாக காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தல்லாகுளம், பீ.பீ.குளம், சிம்மக்கல், கரிமேடு, குட்செட் தெரு, தெற்குவாசல், முனிச்சாலை சந்திப்பு அருகில், விளாங்குடி ஆகிய பகுதிகளில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்து சாதாரண, ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாநகா் மாவட்டத் தலைவா் வீ.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ராஜாஹசன், சையது பாபு, துரையரசன், ஸ்ரீதா், தங்க ராமன் பகுதி தலைவா்கள் முருகன், பாஸ்கர பாண்டியன், விவசாய அணி மாநில பொதுச் செயலா் பெரோஸ்கான், மாநில செயற்குழு உறுப்பினா் ரவி, ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலா் ஜீவன் மூா்த்தி, இளைஞா் காங்கிரஸ் பாலமுருகன், மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் ஷானவாஸ் பேகம், நளினி, கிரிஜாசெல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.