மதுரை மாவட்டத்தில் 39 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக 2,908 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தெற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 48 போ் குணமடைந்தனா். தற்போது மாவட்டத்தில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 596 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 72, 956 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 71,220 போ் குணமடைந்துள்ளனா். 1,140 போ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.