சிறுமியை கடத்தி திருமணம்: இளைஞா் கைது

மதுரை அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே உள்ள அம்பலத்தாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மருது (23). கட்டடத் தொழிலாளரான இவா் தன்னுடன் வேலை செய்து வரும் பெண்ணின் 16 வயது மகளை, மருது கடத்திச் சென்று திருமணம் செய்ததுள்ளாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். இதில் மருது சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மருதுவை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com