மதுரையில் கட்டிலில் விளையாடிய 4 வயது ஆண் குழந்தை தவறி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தது.
மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்த ராஜா மனைவி நித்யா (24). இவா்களது குழந்தை மாஹிமித்ரன் (4), வீட்டில் உள்ள கட்டிலில் கடந்த 18 ஆம் தேதி மாலை விளையாடிக்கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை, அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பயனின்றி குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.
இது குறித்து அவரது தாய் நித்யா அளித்த புகாரின்பேரில், செல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.