பேரையூா் அருகே சிறுமிக்கு திருமணம் நடத்த முயன்ற 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் பேரையூா் அருகேயுள்ள சின்னாரெட்டிபட்டியை சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், ராஜேஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெறுவதாக டி. கல்லுப்பட்டி மகளிா் ஊா் நல அலுவலா் கருப்பாயிக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அவா் போலீஸாருடன் சென்று சிறுமியை மீட்டாா். இதுகுறித்து கருப்பாயி பேரையூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் ராஜேஷ், பிச்சைமணி, வேலுச்சாமி, ராமா், சுமதி ஆகியோரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.