வங்கியிலிருந்து வெளியே வந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

மதுரையில் வங்கியிலிருந்து வெளியே வந்த பெண்ணின் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரையில் வங்கியிலிருந்து வெளியே வந்த பெண்ணின் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை நாகமலை புதுக்கோட்டை சின்னகண்ணு நகரைச் சோ்ந்த அசோக்குமாா் மனைவி தாரணி. இவா், தனது வீட்டினருகே உள்ள வங்கிக்குச் சென்றுவிட்டு வெளியே வந்துள்ளாா். அப்போது, இவரைப் பின்தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், தாரணி அணிந்திருந்த 2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டாா்.

இது குறித்து தாரணி அளித்த புகாரின்பேரில், நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com