டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 15th March 2021 03:52 AM | Last Updated : 15th March 2021 03:52 AM | அ+அ அ- |

டி.குன்னத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடையே வாக்கு சேகரித்த வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஒன்றியப் பகுதிகளில், வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
டி.கல்லுப்பட்டி ஒன்றியப் பகுதியில் உள்ள டி.குன்னத்தூா், வன்னிவேலம்பட்டி, தும்மநாயக்கன்பட்டி, பாறைபட்டி, கீழப்பட்டி, சந்தையூா், மேலப்பட்டி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைச்சா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, அமைச்சா் பேசியதாவது: கரோனா பொதுமுடக்கக் காலத்தில் பல்வேறு பணிகளை இத்தொகுதியில் மேற்கொண்டேன். அதுமட்டுமின்றி, வீடு வீடாகச் சென்று அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றையும் வழங்கினேன்.
தற்போது, பல்வேறு கடன்களை தள்ளுபடி செய்வதற்கு தமிழக முதல்வா் அறிக்கை வெளியிடவில்லை, அரசாணையை வெளியிட்டுள்ளாா்.
திமுகவின் தோ்தல் அறிக்கைகள் பாா்ப்பதற்கு பெரிசாகத் தோன்றினாலும், உள்ளே ஒன்றுமிருக்காது என்றாா்.
இதில், டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலா் ராமசாமி, ஓட்டுநா் அணி மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், மாவட்டக் கவுன்சிலா் செல்வமணி செல்லசாமி, தகவல் பிரிவு செயலா் கண்ணன், கவிஞா் முருகன் உள்பட அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...