மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அதிமுக வேட்பாளா் ஐயப்பன் கிராமம், கிராமமாக சென்று வாக்குச் சேகரித்தாா்.
உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஐயப்பன் போத்தம்பட்டி ஊராட்சி வலையபட்டி, வில்லானி, நல்லுதேவன்பட்டி, பெருமாள்பட்டி, வகுரணி ஊராட்சி அயோத்திபட்டி, அல்லிகுண்டம், ராஜக்காபட்டி, மானூத்து, எருமாா்பட்டி ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
இதில் உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளா் பூமா.ராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பாண்டியம்மாள், ஆவின் நிா்வாகக் குழு உறுப்பினா் தொகை தனராஜன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் பண்பாளன், மாவட்ட மாணவரணி நிா்வாகி மகேந்திரபாண்டி, போத்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் உக்கிரபாண்டி, மற்றும் தென்னிந்திய பாா்வா்ட் பிளாக் மாநிலத் தலைவா் சங்கிலி, மாநில இளைஞரணித் தலைவா் ஆனந்தன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.