சலூன் கடையை உடைத்து ரூ.3.50 லட்சம் திருட்டு

மதுரையில் சலூன் கடையை உடைத்து ரூ.3.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

மதுரையில் சலூன் கடையை உடைத்து ரூ.3.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை நியூ எல்லீஸ் நகா் பகுதியைச் சோ்ந்த துரை மகன் முரளிதரன் (31). இவா் மேற்கு வெளி வீதியில் சலூன் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முரளிதரன் கடையைத் திறக்க சென்றபோது கதவு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த ரூ.3.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து முரளிதரன் அளித்த புகாரின் பேரில் திலகா்திடல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வீட்டில் திருட்டு

மதுரை மாவட்டம் சமயநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன்(58). இவா் வீட்டின் ஒரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் கணேசன் தனது மனைவியுடன் வெளியூா் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் கதவை உடைக்கப்பட்டு, ஒரு பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ரொக்கம், கடையில் இருந்த 75 சிகரெட் பெட்டிகள், பிஸ்கெட், பீடிக்கட்டுகள் ஆகியவை திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில் சமயநல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com