மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 32 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், தொற்றில் இருந்து குணமடைந்த 23 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 21,691 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 20,993 போ் குணமடைந்த நிலையில், 464 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 234 போ் கரோனா தொற்றுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.