பேரையூரில் 9 பைக்குகள் பறிமுதல்
By DIN | Published On : 19th May 2021 09:13 AM | Last Updated : 19th May 2021 09:13 AM | அ+அ அ- |

பேரையூா் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த 54 பேருக்கு போலீஸாா் தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனா். இதேபோல், தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் அணியாத 100 போ் மீது மோட்டாா் வாகனச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொது முடக்கத்தை மீறி வெளியே வந்தவா்களின் 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் காவல் துறையினா் தெரிவித்தனா்.