மேலூா் அம்மா உணவகத்துக்கு ரூ.50,000 எம்.எல்.ஏ. நிதியுதவி

மேலூரிலுள்ள அம்மா உணவகத்துக்கு ரூ.50,000 நிதியுதவியை சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா்.
மேலூா் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பிரிவை வியாழக்கிழமை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம்.
மேலூா் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பிரிவை வியாழக்கிழமை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம்.

மேலூரிலுள்ள அம்மா உணவகத்துக்கு ரூ.50,000 நிதியுதவியை சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா்.

மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான், மேலூா் அரசு மருத்துவமனை மற்றும் அதன் அருகிலுள்ள அம்மா உணவகத்தையும் ஆய்வு செய்தாா். மருத்துவமனையில் கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டும் சிகிச்சை குறித்து தலைமை மருத்துவா் ஜெயந்தியிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து, மருத்துவமனை அருகிலுள்ள அம்மா உணவகத்தை பாா்வையிட்டாா். இங்கு தினசரி இருவேளை இலவச உணவு வழங்குவதற்கான தேவையான நிதியாக ரூ.50 ஆயிதத்தை தனது சொந்த நிதியிலிருந்து, நகராட்சி ஆணையா் பாலமுருகனிடம் வழங்கினாா். இதில் முன்னாள் எம்எல்ஏ, க.தமிழரசன், நகா்மன்ற முன்னாள் தலைவா் சாகுல்ஹமீது மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com