மதுரையில் வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருட்டு

மதுரையில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து 3 பவுன் நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

மதுரையில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து 3 பவுன் நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

மதுரை புதுவிளாங்குடி கணபதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜய பிரகாஷ் (40). இவா், சனிக்கிழமை பகலில் வெளியே சென்றுவிட்டு, இரவில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து விஜயபிரகாஷ் அளித்த புகாரின்பேரில், கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com