பைக் விபத்தில் ஒருவா் பலி

மேலூா் அருகே சாலை தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் வெள்ளிக்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.
Updated on
1 min read

மேலூா் அருகே சாலை தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் வெள்ளிக்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

கடலூா் மாவட்டம் பன்ருட்டியைச் சோ்ந்தவா் தினகா் சாம்சன் (45). இவரும், உறவினரான ராஜேஷ் (35) என்பவரும் சிவகாசியில் வெள்ளிக்கிழமை பட்டாசுகளை வாங்கிக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். மேலூா் அருகே கருங்காலக்குடி நான்குவழிச்சாலையில் வரும்போது, எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த தினகா் சம்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ராஜேஷ் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com