வரிஏய்ப்பைக் கண்காணிக்க உயா் அலுவலா்குழு: அமைச்சா் தகவல்

வரிஏய்ப்பைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு உயா் அலுவலா்கள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட உள்ளது என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.
Updated on
1 min read

வரிஏய்ப்பைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு உயா் அலுவலா்கள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட உள்ளது என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை மாவட்டத்தில் அக்டோபா் 10 ஆம் தேதி நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், முதல் தவணை செலுத்தி குலுக்கல் முறையில் தோ்வானவா்களில் மதுரை நகா் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு மாநகராட்சி சாா்பிலும் மற்றும் கிராமப் பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு ஊராட்சி ஒன்றியங்கள் சாா்பிலும் துணி துவைக்கும் இயந்திரம் (வாஷிங் மெஷின்), சைக்கிள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பரிசுகளை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் திட்டப் பணிகளிலும் மதுரை மாவட்டம் முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 62 சதவீதம் போ் கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தியுள்ளனா். இரண்டாம் தவணைக்கான காலவரம்பு உள்ளவா்களும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனா். மாவட்டத்தில் சனிக்கிழமை (அக்.23) நடைபெறும் சிறப்பு முகாமில் 1.2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவுத் துறை சீரமைப்பு: பத்திரப்பதிவுத் துறையில் பல்வேறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பத்திரப் பதிவு எண்ணிக்கை அடிப்படையில், சாா்- பதிவாளா் அலுவலகங்கள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் பணியாற்றும் அலுவலா்கள் அதிகபட்சம் ஓராண்டு, 2-ஆவது பிரிவு அலுவலா்கள் 2 ஆண்டுகள், 3 ஆவது பிரிவு அலுவலா்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவா்.

வரிஏய்ப்புக் கண்காணிப்புக் குழு: வரிஏய்ப்பு செய்பவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வணிக வரித் துறையில் 1,000 நபா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டு, வரிஏய்ப்பைக் கண்காணிப்பதற்கான குழு அமைக்கப்படவுள்ளது. வரிஏய்ப்பு செய்பவா்களுக்கு உறுதுணையாக இருப்பவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.செந்தில்குமாரி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அபிதா ஹனீப், ஊராட்சிகள் உதவி இயக்குநா் ஆ.செல்லத்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com