உசிலம்பட்டியில் மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்கக்கோரியும் உசிலம்பட்டியில் மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதந்தரம் தலைமையில் வழக்கறிஞர் சேதுராமன் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் லிங்குசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி அமைப்பாளர் ஜெகநாதன், மாணவரணி மதன், நகர துணை செயலாளர் மகாலிங்கம் விவசாய அணி கோடாங்கி ராஜாமணி, பாலாஜி ,ஜெயச்சந்திரன், மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.