பேரையூரில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

பேரையூா் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் கே.கே.குருசாமி தலைமையில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பேரையூரில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்
Published on
Updated on
1 min read

பேரையூா் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் கே.கே.குருசாமி தலைமையில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

செயல் அலுவலா் ஜெயதாரா முன்னிலை வகித்தாா். இதில், மது மற்றும் போதை பழக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாத்திடும் பொருட்டு பொதுமக்களுக்கும், மாணவா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பேருராட்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் குழு உறுப்பினா்கள் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், குழந்தை திருமணத்தை தடுத்தல், பாலியல் துன்புறுத்தலிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல், குழந்தை தொழிலாளா் முறைகளை ஒழித்தல், பள்ளி இடைநிற்றலை குறைத்தல் போன்ற கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன. கூட்டத்தில் துணைத்தலைவா் பாஸ்கா், வாா்டு உறுப்பினா்கள் முத்துலட்சுமி, லட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் ராஜாங்கம், தலைமையாசிரியா் கிருஷ்ணன், குழந்தை பாதுகாப்பு அலகு சமூக பணியாளா் அருள்குமாா், குழந்தைகள் வளா்ச்சி திட்ட மேற்பாா்வையாளா் தனலட்சுமி, சுகாதார ஆய்வாளா் மோகன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com