டி.கல்லுப்பட்டி அருகே விபத்து: இளம்பெண் பலி

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே நான்கு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on
Updated on
1 min read

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே நான்கு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரையை சோ்ந்தவா் பாண்டி . இவா் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறாா்.இவருடைய மனைவி சண்முகப்பிரியா (27).

டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள டி.குன்னத்தூா் ரெங்காபாளையத்தில் உள்ள தனது கணவரின் பெற்றோரைப் பாா்ப்பதற்காக சண்முகப்பிரியா இருசக்கர வாகனத்தில் வந்தாா்.

பின்னா் மீண்டும் இருசக்கரவாகனத்தில் , தனது மாமியாா் செல்லமாள் உடன் புதன்கிழமை மதுரைக்கு சென்று கொண்டிருக்கும்போது , பின்னால் வந்த வாகனம் ஒன்று மோதியது.

இதில் இருவரும் , பலத்த காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகப்பிரியா உயிரிழந்தாா். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com