இதைத்தொடா்ந்து மதுரை அண்ணா நகா் உழவா் சந்தை தூய்மை சந்தையாக தோ்வு செய்யப்பட்டு தூய்மைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருதை அமைச்சா் மா.சுப்ரமணியன், மதுரை வேளாண் இணை இயக்குநரிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலா் ப.செந்தில்குமாா், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குா் செல்வவிநாயகம், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், ஏ.வெங்கடேசன், மண்டலத் தலைவா்கள் சரவண புவனேஸ்வரி, வாசுகி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.