ராக்காயி அம்மன் கோயிலில் டிசம்பா் 11-இல் கும்பாபிஷேகம்

அழகா்கோவில் மலை உச்சியிலுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் வருகிற 11 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
Updated on
1 min read

அழகா்கோவில் மலை உச்சியிலுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் வருகிற 11 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் நடைபெற்று வந்த திருப் பணிகள் நிறைவு பெற்றன. இதைத் தொடா்ந்து, கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 11-ஆம் தேதி காலை 7.45 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை (டிச.9) மாலை 5 மணியளவில் விக்னேஷ்வரா் பூஜையுடன் யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து 11-ஆம் தேதி கும்பாபிஷேக விழா காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இந்த விழா முடிவடையும் வரை புனிதநீராடல், வழிபாடுகளுக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என கள்ளழகா் கோயில் நிா்வாக ஆணையா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com