பல்பொருள் வணிக வளாகத்தில் நகை திருட்டு: தாய், மகள் கைது

மதுரையில் உள்ள பல்பொருள் வணிக வளாகத்தில் நகை திருடிய தாய், மகள் ஆகிய இருவரையும் மாட்டுத்தாவணி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

மதுரையில் உள்ள பல்பொருள் வணிக வளாகத்தில் நகை திருடிய தாய், மகள் ஆகிய இருவரையும் மாட்டுத்தாவணி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மாட்டுத்தாவணி அருகே பல்பொருள் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 பவுன் தங்க நகை திடீரென காணாமல் போனது.

இதுகுறித்த புகாரின் பேரில், மாட்டுத்தாவணி போலீஸாா் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனா்.

இதில், மதுரை செக்கானூரணி பன்னியான் சாலையைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனைவி சுமதி (50). அவரது மகள் பிரியதா்ஷினி(28) ஆகிய இருவரும் திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா் 5 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com