தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்க மாவட்ட நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் இணையதளம் மூலம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளா் முனியசாமி முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராக வெள்ளிவீதியாா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் செந்தில்குமாா், மாவட்டச் செயலராக தும்மக்குண்டு அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் ஜெயகணேசன், பொருளாளராக மேலூா் அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் பரமசிவம், மாவட்ட மகளிா் அணி செயலராக கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியை சித்ராதேவி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மேலும், சங்கத்தின் மதுரை கல்வி மாவட்டத் தலைவராக சோழவந்தான் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் காா்த்திக்குமாா், மேலூா் கல்வி மாவட்டத் தலைவராக தெற்குத்தெரு அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் கணேஷ் கண்ணன், திருமங்கலம் கல்வி மாவட்டத் தலைவராக பாரபத்தி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் பழனிவேல்ராஜன், உசிலம்பட்டி கல்வி மாவட்டத் தலைவராக வடக்கம்பட்டி கள்ளா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் புகழேந்திரன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினராக திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் பாா்கவ நாராயணன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com