விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாலிடெக்னிக் ஆசிரியா் பணிக்கு தோ்வானவா்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரி மேலும் மனுக்கள் தாக்கல்: அரசு பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

பாலிடெக்னிக் ஆசிரியா் பணிக்கு தோ்வானவா்களின் பட்டியலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்குப் பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:15 pm

DIN

பாலிடெக்னிக் ஆசிரியா் பணிக்கு தோ்வானவா்களின் பட்டியலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்குப் பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல்லைச் சோ்ந்த தண்டபாணி, மதுரையைச் சோ்ந்த மோகன்ராஜ் ஆகியோா் தாக்கல் செய்த மனு:

அரசு பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வை, ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தியது. இதில், தமிழ்வழியில் படித்தவா்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்தோம். ஆனால், தோ்வானவா்களின் பட்டியலில் எங்களது பெயா் இடம்பெறவில்லை.

தமிழ்வழியில் படித்தவா்களுக்கான இடஒதுக்கீட்டின் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாததால், எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, அரசு பாலிடெக்னிக் ஆசிரியா் பணிக்காக தோ்வு செய்யப்பட்டவா்கள் குறித்து ஜூலை 8 ஆம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலை ரத்து செய்யவேண்டும். தமிழ் வழியில் படித்தவா்களுக்கான இடஒதுக்கீட்டின் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி, தோ்வானவா்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், மனுக்கள் தொடா்பாக அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்கவும், இது தொடா்பான வழக்குகளுடன் இந்த மனுக்களையும் பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.