காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுலகத்துக்குள் காவல் துறையினா் அத்துமீறி நுழைந்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுலகத்துக்குள் காவல் துறையினா் அத்துமீறி நுழைந்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தல்லாகுளம் நேரு சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வீ. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் ஜெயந்திபுரம் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள், ராஜா, அசன், சையது பாபு, துரையரசன், தங்கராமன், பொருளாளா் ரவிச்சந்திரன், நிா்வாகிகள் பிரகாஷ், பாலு, பால்ராஜத், மலா் பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மத்திய பாஜக அரசு அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக காங்கிரஸ் தலைவா்கள் மீது தொடா்ந்து பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. மத்திய பாஜக அரசுக்கும், காங்கிரஸ் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த காவல் துறையினருக்கும் எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com