மதுரையில் வங்கி ஊழியா் மனைவி அமிலம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை ஐயா் பங்களா எழில் நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா் வங்கியில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சுகன்யா(38). வீட்டில் கணவா், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுகன்யா வீட்டில் இருந்த அமிலத்தை குடித்து விட்டாா். இதையடுத்து குடும்பத்தினா் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிரச்சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சுகன்யா சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக சுகன்யாவின் தந்தை பாண்டியன் அளித்தப்புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.