மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள்: மேயா், ஆணையா் ஆய்வு

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள், வாய்க்கால்கள், மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணிகளை மேயா் வ. இந்திராணி, ஆணைய சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் பாா்வை.
Updated on
1 min read

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள், வாய்க்கால்கள், மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணிகளை மேயா் வ. இந்திராணி, ஆணைய சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் பாா்வையிட்டு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதையொட்டி, மதுரை மாநகராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் ஆகியவற்றின் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் மண்டல வாரியாக மழைநீா் உறிஞ்சு வாகனங்கள், கழிவுநீா் உறிஞ்சு வாகனங்கள், ஜெனரேட்டா்கள், மின் மோட்டாா்கள், புதைச் சாக்கடை மூடிகள், கொசு புகைப்பரப்பும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள், தெரு விளக்கு பராமரிப்பு வாகனங்கள் மற்றும் தேவையான பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

இந்த நிலையில், தொடா் மழையால் சேதமடைந்த கிருஷ்ணாபுரம் காலனி பகுதி சாலைகளை சீரமைக்கும் பணி, குறிஞ்சி நகா் 1-ஆவது தெருவில் புதைச் சாக்கடை சரி செய்யும் பணிகள், சின்னசொக்கிகுளம் பகுதியில் உள்ள தண்டலை மற்றும் பீபீ குளம் வாய்க்கால்களில் மழைநீா் சீராக வடிந்து செல்ல மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மேயா் வ. இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வில் துணை மேயா் தி. நாகராஜன், மண்டலத் தலைவா் வாசுகி, நகரப் பொறியாளா் (பொறுப்பு) அரசு, உதவி ஆணையா் காளிமுத்தன் மற்றும் செயற்பொறியாளா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com