அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

பேரையூா் அருகே இளைஞா் மா்ம மரணம்

பேரையூா் அருகே இளைஞா் மா்மமான முறையில் மரணம் அடைந்ததாக, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 5:59 pm

DIN

பேரையூா் அருகே இளைஞா் மா்மமான முறையில் மரணம் அடைந்ததாக, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள பழையூரைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் ராஜ்குமாா் (32). இவரது மனைவி ராதா. இவருக்கு 2 மகள்கள் உள்ளனா். தற்போது திருப்பூரில் வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில் குடும்ப விழாவில் பங்கேற்க, சொந்த ஊரான பழையூருக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜ்குமாா், மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸாா், ராஜ்குமாரின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, புகாரின் பேரில் சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.