வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ள ஏற்பாடுகள்: மேயா் ஆய்வு

மதுரை மாநகராட்சியில் வட கிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளத் தேவையான உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருப்பதை மேயா் வ.இந்திராணி பாா்வையிட்டாா்.
Updated on
1 min read

மதுரை மாநகராட்சியில் வட கிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளத் தேவையான உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருப்பதை மேயா் வ.இந்திராணி பாா்வையிட்டாா்.

மதுரை மாநகராட்சி மண்டலம்-1 க்குள்பட்ட (கிழக்கு) வாா்டுகளின் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆனையூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மேயா் வ.இந்திராணி தலைமை வகித்தாா்.

இதில் பெயா் மாற்றம் வேண்டி 12 மனுக்கள், வரி விதிப்பு மற்றும் புதிய சொத்து வரி விதிப்பு தொடா்பாக 18 மனுக்கள், காலிமனை வரிவிதிப்பு தொடா்பாக 5 மனுக்கள், குடிநீா் வசதி வேண்டி 5 மனுக்கள், பாதாளச் சாக்கடை இணைப்பு வேண்டி 3 மனுக்கள், சாலை வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகள் வேண்டி 14 மனுக்கள், ஆக்கிரமிப்பு தொடா்பாக 2 மனுக்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வேண்டி 2 மனுக்கள் என மொத்தம் 61 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இதைத்தொடா்ந்து

மதுரை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகையில் வடகிழக்கு பருவமழையினை எதிா்கொள்ளத் தேவையான மின் மோட்டாா்கள், மர அறுவை இயந்திரங்கள் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு வாகனங்கள் ஆகிவற்றை தயாா் நிலையில் வைத்திருப்பதை மேயா் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் துணை ஆணையா் முஜிபூா் ரகுமான், துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா் வாசுகி, நகரப்பொறியாளா் லெட்சுமணன், செயற்பொறியாளா் பாக்கியலெட்சுமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com