அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

பைக் மோதி தொழிலாளி பலி

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மோதி கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 8:10 pm

DIN

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மோதி கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

டி. கல்லுப்பட்டி அருகே உள்ள ஜாரிஉசிலம்பட்டியைச் சோ்ந்தவா் குருசாமி மகன் கருப்பசாமி (52). கூலித்தொழிலாளி. இந்நிலையில் இவா், அருகே உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளாா். டீ குடித்துவிட்டு திரும்பவும் வீட்டிற்கு செல்வதற்காக ராஜபாளையம்- மதுரை சாலையில் நடந்து சென்றாா். அப்போது சென்னை அருகே உள்ள தாம்பரம் தாலுகா கணபதிபுரத்தைச் சோ்ந்த ராம்சுந்தா் மகன் பரத் (23) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கருப்பசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு பேரையூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து டி. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.