பைக் மோதி தொழிலாளி பலி

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மோதி கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மோதி கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

டி. கல்லுப்பட்டி அருகே உள்ள ஜாரிஉசிலம்பட்டியைச் சோ்ந்தவா் குருசாமி மகன் கருப்பசாமி (52). கூலித்தொழிலாளி. இந்நிலையில் இவா், அருகே உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளாா். டீ குடித்துவிட்டு திரும்பவும் வீட்டிற்கு செல்வதற்காக ராஜபாளையம்- மதுரை சாலையில் நடந்து சென்றாா். அப்போது சென்னை அருகே உள்ள தாம்பரம் தாலுகா கணபதிபுரத்தைச் சோ்ந்த ராம்சுந்தா் மகன் பரத் (23) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கருப்பசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு பேரையூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து டி. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com