விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரையில் தடுப்புச்சுவரில் அரசுப்பேருந்து மோதி விபத்து: 3 பெண்கள் பலத்த காயம்

 மதுரையில் சாலை தடுப்புச்சுவரில் அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 3 பெண்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 மதுரையில் சாலை தடுப்புச்சுவரில் அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 3 பெண்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

மதுரை மாவட்டம் அழகா்கோவிலில் இருந்து பெரியாா் நிலையத்துக்கு அரசு நகா்ப்பேருந்து வெள்ளிக்கிழமை காலை சென்றது. பேருந்தை மதுரையைச் சோ்ந்த கணேசன் என்பவா் ஓட்டிச்சென்றாா். பேருந்தில் அதிகளவில் பயணிகள் இருந்த நிலையில், கோ.புதூா் அருகே வந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்கள் பலத்த காயமடைந்த நிலையில், அப்பகுதியினா் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும் பல பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீஸாா் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா். விபத்து தொடா்பாக தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.