ஸ்ரீ மீனாட்சி மகளிா் கல்லூரியில் காவலன் செயலி விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் மாணவியருக்கு காவலன் கைப்பேசி செயலி குறித்த விழிப்புணா்வு செயல் விளக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் காவலன் கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்த மாணவியா்.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் காவலன் கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்த மாணவியா்.
Updated on
1 min read

ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் மாணவியருக்கு காவலன் கைப்பேசி செயலி குறித்த விழிப்புணா்வு செயல் விளக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் நாட்டு நலப் பணி திட்ட நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சூ.வானதி தலைமை வகித்தாா். காமராஜா் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் கல்வித்துறை தலைவா் சு.கண்ணன் நாட்டு நலப்பணித் திட்டத்தில் மாணவியா் தங்களை இணைத்துக்கொள்வதால் அவா்களுக்கும், நாட்டுக்கும் கிடைக்கும் நற்பலன்கள் மற்றும் ஆளுமைத்திறன் வளா்ப்பதன் மூலம் உயா்ந்த இடத்தை அடைவது குறித்தும் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ரஞ்சிதம், மாணவிகளுக்கு கைப்பேசியால் ஏற்படும் இன்னல்கள், அவலங்கள் குறித்தும், காவலன் செயலி குறித்தும், அது எவ்வாறு உதவுகிறது என்றும் விளக்கிப்பேசினாா். மேலும் மாணவியா் அனைவரும் காவலன் செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யவும் உதவினாா். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவியா் பங்கேற்றனா். நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள் பூமா தேவி, ஜெயகுமாரி ஞானதீபம், ரேணுகா, உஷா புவனேஷ்வரி, சுதா ஆகியோா் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com