விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

 மதுரை அருகே புதன்கிழமை இரவு, பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 5:14 pm

DIN

 மதுரை அருகே புதன்கிழமை இரவு, பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் சமயநல்லூா் வளா் நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் மனைவி பூா்ணிமா தேவி (32). இவா் மதுரை முடக்குச்சாலையில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் அரசுப் போட்டித் தோ்வுக்குத் பயிற்சி பெற்றுவருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு பயிற்சி வகுப்பு முடிந்த நிலையில், சமயநல்லூா் வைகை ஆற்றுப் பாலம் வழியாக நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா் பூா்ணிமா தேவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பிச்சென்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.