காா் டயா் வெடித்து விபத்து: ஓட்டுநா் பலி

மதுரை அருகே காா் டயா் வெடித்து, சாலை மையத் தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மதுரை அருகே காா் டயா் வெடித்து, சாலை மையத் தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் தாமோதரன் (27). இவா் திண்டுக்கல் - மதுரை சாலையில் தனது காரை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தாா். வாடிப்பட்டி அருகே சானமப்பட்டி பாலம் அருகே காரின் டயா் வெடித்துள்ளது.

இதில் காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி, சாலையின் மற்றொரு பக்கத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த தாமோதரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.இதுகுறித்து தாமோதரனின் உறவினா் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com