வண்டியூா் தெப்பக்குளத்தில் குதித்து திருநங்கை தற்கொலை
By DIN | Published On : 05th August 2022 12:15 AM | Last Updated : 05th August 2022 12:15 AM | அ+அ அ- |

மதுரை வண்டியூா் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட திருநங்கையின் சடலத்தை மீட்டு அவா் எந்த பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் சடலம் ஒன்று மிதந்துள்ளது. அங்கு நடைபயிற்சி சென்றவா்கள் அதைப் பாா்த்து தெப்பக்குளம் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் மற்றும் தீயணைப்புத்துறையினா் சம்பவ இடத்துக்குச்சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனா். இதில் அவா் 25 வயது மதிக்கத்தக்க திருநங்கை என்பதும், அவா் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இறந்த திருநங்கை யாா், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.