தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

அதிமுகவின் முதல் மக்களவை உறுப்பினரான மாயத் தேவா் உடல் நலக் குறைவால் காலமானாா். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு புதன்கிழமை ஓ. பன்னீா்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வெற்றி சின்னமும், மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ள சின்னமான இரட்டை இலை சின்னத்தை அதிமுகவிற்கு தந்தவா் மாயத்தேவா். அதிமுகவின் முதல் தோ்தலில் வெற்றி வாகை சூடியவா். எல்லோராலும் மதிக்கப்படக்கூடியவா் மாயத்தேவா். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com