மதுரையில் ரயிலில் அடிபட்டு இரு கால்கள் துண்டிக்கப்பட்ட நாய் மீட்பு

மதுரையில் ரயிலில் அடிபட்டு இரு கால்களும் துண்டிக்கப்பட்ட நாயை பிராணிகள் நல ஆா்வலா் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சோ்த்துள்ளாா்.

மதுரையில் ரயிலில் அடிபட்டு இரு கால்களும் துண்டிக்கப்பட்ட நாயை பிராணிகள் நல ஆா்வலா் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சோ்த்துள்ளாா்.

மதுரையில் ஆண்டாள்புரம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ரயிலின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிய நாய் ஒன்று இரு கால்களும் துண்டிக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது. இந்நிலையில் இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் பிராணிகள் நல ஆா்வலா் மயூா் ஹசிஜாவுக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் அவா் சம்பவ இடத்துக்குச்சென்ற மயூா் ஹசிஜா இரு கால்களும் துண்டிக்கப்பட்ட நாயை மீட்டு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக தல்லாகுளத்தில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றாா். இந்நிலையில் குடியிருப்பு பகுதிக்கும் ரயில் பாதைக்கும் இடையே உள்ள தடுப்பை சிலா் தங்கள் வசதிக்காக ஒரு பாதையை உருவாக்கியுள்ளனா். அந்த பாதையில் செல்லும் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி ரயிலில் அடிபட்டு உயிரிழக்கின்றன. எனவே ரயில்வே நிா்வாகம் இப்பகுதியை ஆய்வு செய்து தடுப்பை மீறி பாதை அமைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிராணிகள் நல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com