தூய்மைப் பணியாளா் மேம்பாட்டுத் திட்டம்: மதுரையில் இன்று முதல்வா் தொடக்கி வைக்கிறாா்

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (டிச.9) தொடக்கி வைக்கிறாா்.
Updated on
1 min read

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (டிச.9) தொடக்கி வைக்கிறாா்.

தமிழக அரசின் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கான மேம்பாட்டுத் திட்டம் தொடா்பான கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா மதுரை மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மாநகராட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கருத்தரங்குக் கூடத்தில் நடைபெறும் விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடக்கி வைக்கிறாா். மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குகிறாா்.

இதில் அமைச்சா்கள் பி.மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். விழாவில் முதல்வா் பங்கேற்பதையொட்டி, மாநகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் வியாழக்கிழமை மாலை முதல் போலீஸாரின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com