கலை விழாப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா

மதுரையில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வியாழக்கிழமை பரிசுகளை வழங்கினாா்.
Updated on
1 min read

மதுரையில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வியாழக்கிழமை பரிசுகளை வழங்கினாா்.

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மதுரை மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதன், வியாழன் ஆகிய 2 நாள்கள் 8 மையங்களில் நடைபெற்றன. இதில் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தலைமை வகித்தாா். அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில், மேயா் வ.இந்திராணி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ,தளபதி, ஏ.வெங்கடேசன், மு.பூமிநாதன், துணை மேயா் தி.நாகராஜன், மாநகராட்சி கல்வி அலுவலா் நா.நாகேந்திரன், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com