சிவகங்கை நகராட்சி பெண் அலுவலருக்கு மிரட்டல் விடுத்ததாக ஒப்பந்ததாா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
சிவகங்கை நகராட்சிப் பொறியாளா் பாண்டீஸ்வரி, நகா், ஊரமைப்பு அலுவலா் திலகவதி உள்ளிட்ட அலுவலா்கள் அங்குள்ள பேருந்து நிலையத்துக்குள் வரி செலுத்தாமல் உள்ள நகராட்சிக் கடைகளுக்கு சீல் வைத்து, ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை அகற்றினா். அப்போது அங்கு வந்த நகராட்சி ஒப்பந்ததாரா் சுந்தரபாண்டியன், நகா், ஊரமைப்பு அலுவலா் திலகவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டினாராம். இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் ஒப்பந்ததாரா் சுந்தரபாண்டியன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.