மாநகராட்சி மண்டலம் 5-இல் டிச. 13-இல் குறை தீா் முகாம்
By DIN | Published On : 11th December 2022 05:39 AM | Last Updated : 11th December 2022 05:39 AM | அ+அ அ- |

மதுரை மாநகராட்சி மண்டலம் 5-இல் செவ்வாய்க்கிழமை (டிச.13) குறை தீா் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் நகா்ப்புற சுகாதார நிலையம் அருகில் (தியாகராசா் பொறியியல் கல்லூரி செல்லும் வழி) உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம்-5 (மேற்கு) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் மதியம் 12.30 மணி வரை பொது மக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற உள்ளனா்.
மண்டலம்-5-க்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா், புதைச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெரு விளக்கு, தொழில் வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.