விருதுநகா் அருகே 50 மூட்டை குட்கா பறிமுதல்: 5 போ் கைது
By DIN | Published On : 11th December 2022 05:41 AM | Last Updated : 11th December 2022 05:41 AM | அ+அ அ- |

விருதுநகா் அருகே 50 மூட்டைகளில் இருந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஐந்து பேரை கைது செய்தனா்.
விருதுநகா் அருகேயுள்ள கட்டனாா்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதன் பேரில், அப்பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்ட போது, 50 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரான
ஓ. கோவில்பட்டியைச் சோ்ந்த பொன்னுப் பாண்டி (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா் அளித்த தகவலின் பேரில் விருதுநகா் அருகே சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் (46), ராஜசேகா் (34) , கணேஷ் (37), கட்டனாா்பட்டியைச் சோ்ந்த குணசேகரன் (33) ஆகியோரை ஆமத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.