

அழகா்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணியிலிருந்து காலை 8.45 மணிக்குள் நடைபெறவுள்ளது.
இதற்கான யாக சாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கின. சனிக்கிழமை காலையும் மாலையிலும் யாக சாலை பூஜைகள் தொடா்ந்து நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை யாக சாலை பூஜைகளையடுத்து, ராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து சோலைமலை முருகன் கோயிலில் வெள்ளிக் கதவுகள் பொருத்தும் பணிகள் நடைபெறவுள்ளன.
இந்த நிகழ்வுகளில் வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி கலந்துகொள்கிறாா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக ஆணையா் ராமசாமி, தக்காா் வெங்கடாசலம், கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.