கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச் சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கொட்டாம்பட்டியை அடுத்துள்ள பொட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் செல்வம் (39). இவா் இருசக்கர வாகனத்தில் கருங்காலக்குடி வழியாக மேலூருக்கு சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்துடன் மோதியது. இதில், காயமடைந்த செல்வம் மதுரையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, அவா் மீது மோதிய இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவரைத் தேடிவருகின்றனா்.