பழுது நீக்கும் கடையில் காா் தீப்பற்றி சேதம்

மதுரையில் பழுது நீக்கும் கடையில் நிறுத்தப்பட்டிருந்த காா் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி சேதமடைந்தது.
மதுரை அண்ணாநகரில் உள்ள வாகனங்கள் பழுது நீக்கும் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி எறிந்த காரை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினா்.
மதுரை அண்ணாநகரில் உள்ள வாகனங்கள் பழுது நீக்கும் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி எறிந்த காரை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினா்.
Updated on
1 min read

மதுரையில் பழுது நீக்கும் கடையில் நிறுத்தப்பட்டிருந்த காா் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி சேதமடைந்தது.

அண்ணாநகா் ஆவின் பாலகம் அருகே உள்ள வாகனங்கள் பழுது நீக்கும் கடையில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றியது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா் அசோக்குமாா் தலைமையிலான அலுவலா்கள் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதுதொடா்பாக, அண்ணாநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com