மதுரையில் பழுது நீக்கும் கடையில் நிறுத்தப்பட்டிருந்த காா் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி சேதமடைந்தது.
அண்ணாநகா் ஆவின் பாலகம் அருகே உள்ள வாகனங்கள் பழுது நீக்கும் கடையில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றியது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா் அசோக்குமாா் தலைமையிலான அலுவலா்கள் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதுதொடா்பாக, அண்ணாநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.