பெண் சாா்பு- ஆய்வாளரிடம் 12 பவுன் நகைகள் பறிப்பு

மதுரையில் சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சாா்பு- ஆய்வாளரிடம் 12 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரையில் சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சாா்பு- ஆய்வாளரிடம் 12 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை நாராயணபுரம் பேங்க் காலனி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி சுகுணா (46). இவா் மதுரை மாநகர வரதட்சிணை தடுப்புப் பிரிவில் சிறப்பு சாா்பு- ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பணி முடித்துவிட்டு, சுகுணா இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றாா். கிருஷ்ணாபுரம் காலனி சந்திப்பு அருகே சென்ற போது, அவரைப் பின் தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், அவரை வழிமறித்தனா். பின்னா், சுகுணா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதுதொடா்பான புகாரின் பேரில், தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

இதேபோன்று, மதுரை துரைசாமி நகா் பகுதியைச் சோ்ந்த கண்ணன் மனைவி மாரீஸ்வரி (45). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் மதுரா கோட்ஸ் பாலம் அருகே சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் மாரீஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுதொடா்பாக, கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com